பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும், மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு ஏக தின பிரம்மோற்சவம் நடந்தது காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு தோமாலை சேவை, காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்சவாகன சேவையில் அருள்பாலித்தார். 9:00 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10:00 மணிக்கு அனுமந்த் வாகன சேவை, காலை 11:00 மணிக்கு சேஷ வாகன சேவை, பகல் 12:00 மணிக்கு கருட வாகன சேவை நடந்தது. மாலை 3:00 மணிக்கு யானை வாகனம், 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருத்தேரில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.