திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை; பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 11:10
திருப்பதி; திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் நேற்று மாலை பவுர்ணமி கருட சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியமானதாக கருதப்படுகிறது. பெருமாளின் கருட வாகன சேவையை தரிசிக்க திருமலையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். திருப்பதியில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கருட சேவை உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று மாலை பவுர்ணமியை கருட சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்த கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்.