மானாமதுரை; மானாமதுரை அலங்கார குளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை பால்,பன்னீர்,சந்தனம்,இளநீர், தயிர்,திரவியம் முன்னிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.