குயவன்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் பவுர்ணமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 12:10
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் பவுர்ணமி, வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஷீரடி சாய் ஆச்சார்யா தியான் மந்திரில் காலை 6 :00 மணிக்கு ஆரத்தியும், 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்ப அபிஷேகம், அலங்காரம் நடந்தது. உற்ஸவருக்கு காலை 10:00 மணிக்கு சிறப்ப அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியும், கூட்டு பிரார்த்தனை, பஜனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.