Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குயவன்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் ... சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை, மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள் தேர்வு
எழுத்தின் அளவு:
சபரிமலை, மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள் தேர்வு

பதிவு செய்த நாள்

18 அக்
2024
01:10

சபரிமலை; சபரிமலை மற்றும் மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள், நேற்று காலை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர்.


திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 25 பேரின் பெயர், துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு, ஒவ்வொரு சீட்டாக சுருட்டி ஒரு வெள்ளி பாத்திரத்தில் போடப்பட்டது. மற்றொரு வெள்ளி பாத்திரத்தில், 24 வெள்ளை துண்டு காகிதங்களும், ஒரு துண்டு தாளில் மட்டும் மேல் சாந்தி எனவும் எழுதப்பட்டு, சுருட்டி போடப்பட்டது. பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா, இரண்டு வெள்ளி பாத்திரங்களில் இருந்தும், இரண்டு துண்டு சீட்டுகளை எடுத்தார். 16வது துண்டு சீட்டில், கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரையைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரி பெயர் வந்தது. அப்போது, மற்றொரு வெள்ளி பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீட்டில், மேல் சாந்தி என்று வந்ததால், அவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதுபோல, மாளிகைபுறத்தம்மன் கோவிலுக்காக தயாரிக்கப்பட்ட, 15 பெயர்கள் குலுக்கப்பட்டு, சிறுமி வைஷ்ணவி சீட்டுகளை எடுத்தார். 13-வது சீட்டாக, கோழிக்கோடு மாவட்டம் உளவன்னா என்ற இடத்தை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி, மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர். அதன் பின், ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லை; காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாத பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது இதில் திரளான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ... மேலும்
 
temple news
வால்பாறை; ஐப்பசி முதல் நாளான இன்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.வால்பாறை சுப்ரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar