பதிவு செய்த நாள்
18
அக்
2024
03:10
நெல்லை; காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் முக்கிய நிகழ்வாக அன்னை காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு தா்பை புற்கள் கட்டி, பட்டுபுடவை, மலா் மாலைகள் அணிவித்து அலங்காிக்கப்பட்டு சோடச உபசார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருநெல்வேலி நகா் நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. வருகின்ற 28.10.24 - 11ம் திருநாள் அன்று மதியம் 12.00 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் அன்னைகாந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் மறுநாள் 29.10.24 அதிகாலை 4.30 - 05.30 மணிக்குள் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டிணபிரவேசமும் பின்னா் மூன்று தினங்கள் இரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகின்றன. நிறைவாக 01.11.24 அன்று சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டிணபிரவேச வீதிஉலாவும் நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினா் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.