த.வெ.க., மாநாடு : விழுப்புரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 03:10
நாகப்பட்டினம்; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள த.வெ.க., மாநில மாநாடு வெற்றிப் பெற நாகையில் த.வெ.க., கட்சியினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 27 ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாடு தான் இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை என அக்கட்சியினர் ஆர்வத்தில் உள்ளனர். நாகையில் பரவலாக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர். இன்று மாவட்ட தலைவர் சுகுமாறன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுகன்யா முகுந்தன் தலைமையில் நிர்வாகிகள், நாகை, நீலாயதாட்சியம்மன் கோவிலில், மாநாடு வெற்றிப் பெற வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினர். அதே போல் அக்கட்சி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களில் மனதுருக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.