Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் கோவிலில் ஆகம மீறல் புது ... கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவக்கம்; நவ.,7ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பழநியில் கந்த சஷ்டி விழா  நவ.,2ல் துவக்கம்; நவ.,7ல் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

25 அக்
2024
05:10

பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.


பழநி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் சஷ்டி விரதம் விரதம் இருந்து வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. தற்போதைய குரோதி ஆண்டு, ஐப்பசி 16, (நவ.,2ல்) உச்சிக்கால பூஜைக்கு பின் மலைக் கோயிலில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது. அன்று முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு விழா நாட்களில் நடைபெறும்.


சூரசம்ஹாரம்: ஆறாம் நாள், நவ.7., மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி,மாலை 3:10 மணிக்கு மேல் நடைபெறும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, மலைக் கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வார். சஷ்டி விரதம் விரதம் இருந்த பக்தர்கள் வாழைத்தண்டை படையல் ஆக்கி வழிபடுவர். அன்று கிரிவீதியில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். அதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிநிதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன் பின் இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும்.


திருக்கல்யாணம்: ஏழாம் நாள், நவ.8ல் மலைக்கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி,,தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, சுவாமி தங்க குதிரையில் திருஉலா நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர். விழா நாட்களில் மலைக்கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் ... மேலும்
 
temple news
மேலூர்; கீழவளவில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆடி மாத சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar