Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி ... சிருங்கேரி பீடாதிபதியின் சன்னியாச தீட்சை பொன்விழா கொண்டாட்டம் சிருங்கேரி பீடாதிபதியின் சன்னியாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

26 அக்
2024
08:10

செஞ்சி; செஞ்சி அருகே 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், செஞ்சி நுாலகர் பூவழகன் ஆகியோர் கப்பை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர். 


இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: கப்பை கிராமத்தில் மலைப் பகுதியில் ஆய்வு செய்தில் இங்குள்ள குகை தளத்தில் தொன்மையான பழங்கால ஓவியங்கள் இருப்பது தெரியவந்தது. மனிதன் மற்றும் விலங்கின உருவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆங்காங்கே மங்கலாகத் தெரிகிறது. ஒரு மனிதன் இரண்டு கைகளையும் துாக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓவி யம் சிறப்பானதாக உள்ளது. மேலும் இந்த ஓவிய தொகுப்பில் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ள கை ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காணப்படும் இத்தகைய ஓவியம் தமிழ்நாட்டில் விழுப்புரம் அடுத்த ஆலம்பாடி பாறை ஓவியங்களில் இடம் பெற்றுள்ளது.‌ கப்பை கிராமத்தில் உள்ள பாறை ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டை நமக்குச் சொல்பவை. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் மங்கி மறைந்து விட்டன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள இடர் நீக்கியம்மன், புல்லாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar