ஐப்பசி சனி; வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுந்தராபுரம் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2024 09:10
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் துளசி மற்றும் வெற்றிலை மாலை அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.