கோவை ஆதி சிவன், வாராகி அம்மன் கோவிலில் மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2024 09:10
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் காவிநிற வஸ்திரத்தில் மகாவிஷ்ணு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.