பதிவு செய்த நாள்
26
அக்
2024
10:10
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேதபாராயணம் செய்த வேத பண்டிதர்களுக்கு காஞ்சி மடத்தில் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் காஞ்சி மடம் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன்கடந்த 18ம் தேதி முதல் சதுர்வேத பாராயணம் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன் வேத பாராயணம் நிறைவடைகிறது. இதில் ரிக் வேதத்தை பாலாஜி சர்மா, சுகுமார், விக்னேஷ், சுக்ல யஜூர் வேதத்தை ராஜேஷ், பரணிதரன், சாய்ஜகதீசன், மத்யாத்தினி சாகையை நிஷாந்த், பரத்வாஜ், ரவிகாந்த் சர்மா, கிருஷ்ணய யஜூர் ஜடாபாராயணத்தை கனபாடிகளான ஸ்ரீவத்ஸன், சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், கணேஷ், ஆதித்யா, கிருஷ்ணமூர்த்தி சூர்யா, பரத்வாஜ், கோமதிசங்கரன், ராமகிருஷ்ணன், சாம வேதத்தை சவுந்திரராஜன், நாகராஜன், ஹனீஷ்குமார், யஜூர் வேத ஸம்ஹிதை பாராயணத்தை ஸ்ரீராம், பரமேஸ்வரன், ஹரி, அதர்வண வேதத்தை திருப்பதிசந்தீப் திரிபாதி, சவுரவ் ஆனந்த், ஹரி வாத்யார் பாராயணம் செய்தனர்.
கவுரவிப்பு; காஞ்சி மடத்தில் நடந்த கவுரவிப்பு நிகழ்ச்சியில் வேதபாராயணம் செய்தவர்களை காஞ்சி மடம் மேலாளர் நாராயணன் கவுரவித்தார். இதில் கயிலை கண்ணன், ஆடிட்டர்கள் சுந்தர்ராமன், ராமராஜன், தஞ்சை பாலு, சுப்பிரமணியன், ராஜகோபால், ரகுநாதன், ரமேஷ், ராஜலெட்சுமி, சீனிவாசன், சாரதா, மடம் பொறுப்பாளர் ராமமூர்த்தி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.