Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதயவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதயவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
10:11

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதயவிழா துவக்கமாக களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கத்தில் ஓதுவார்கள் பாடினர்

தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில்,இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா இன்று (நவ.9) மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோவிலில் கடந்த 1ம் தேதி காலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. விழாவில் இன்று நவ.9ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது. விழா துவக்கமாக களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கத்தில் ஓதுவார்கள் பாடினர். 

நவ.10 ம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறும். பின்னர் பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும். இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், அரண்மனை தேவஸ்தானம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar