Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சத்திரம், புல்மேடு வனப்பாதையில் இடுக்கி எஸ்.பி ஆய்வு
எழுத்தின் அளவு:
சபரிமலை சத்திரம், புல்மேடு வனப்பாதையில் இடுக்கி எஸ்.பி ஆய்வு

பதிவு செய்த நாள்

13 நவ
2024
03:11

கூடலுார்; சபரிமலைக்குச் செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக நவ.15 மாலையில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வர உள்ளனர். கோயிலுக்கு செல்ல குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எரிமேலி வழியாக பம்பை வரை 100 கி.மீ., தூரம் வாகனத்தில் சென்று அங்கிருந்து 7 கி.மீ.தூரம் வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் கோயிலை அடையலாம். அதே வேளையில் குமுளி வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து சத்திரம், புல்மேடு வனப்பாதையில் 14 கி.மீ., தூரம் நடந்து சென்றால் குறைவான நேரத்தில் கோயிலை அடைந்து விடலாம். அதனால் விரைவாக கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் இவ்வழியை அதிகம் பயன்படுத்துவார்கள். 2010 ஜனவரியில் புல்மேட்டில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து புல்மேடு வனப்பாதை மூடப்பட்டது. இதனை ஒட்டியுள்ள சத்திரம் வனப்பகுதி வழியாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த ஆண்டு இப்பாதையில் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு மேல் கேரள வனத்துறையினரால் பாதை சீரமைப்பு பணி நடந்தது. இந்நிலையில் இடுக்கி எஸ்.பி.விஷ்ணு பிரதீப், ஜீரோ பாயிண்டில் இருந்து வனப்பாதை வழியாக சத்திரம் வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். சத்திரத்தில் வனத்துறை, தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்காக செய்யும் வசதிகள் குறித்து பார்வையிட்டார். அதிகாலை 5 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே இப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீவ் செரியன், வண்டிப்பெரியாறு இன்ஸ்பெக்டர் சுவர்ண குமார், வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி பிரதோஷம் தினமாகும். சனி பிரதோஷம் சிவனை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்;   விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவியருடன் புஷ்ப பல்லக்கில் ... மேலும்
 
temple news
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் திருக்கொளுவூர் ஆதிநாகநாதர் கோயில் வசந்தவிழா மே 31 கொடி ... மேலும்
 
temple news
கோவை; கோவை கண்ணப்ப நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை ஒட்டி, பண ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முகூர்த்த நாட்களில் 60க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar