சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமுநாச்சியம்மன் கோயிலில் மலநல்லிணக்க பூக்குழி விழா நடந்தது. இந்து, முஸ்லிம் பக்தர்கள் ஏராளமானோர், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊராட்சி தலைவர்கள் அருணாச்சலம்(பெரியகுளம்), காதர் சம்சு(ஒப்பிலான்), கடுகுசந்தை ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம் உட்பட ஏராளமனோர் பங்கேற்றனர்.