Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவாஷ்டமி; பைரவரை வழிபட கஷ்டம் ... ரமா ஏகாதசி விரதம்; விஷ்ணுவை வழிபட வாழ்வில் மேன்மை கிடைக்கும்! ரமா ஏகாதசி விரதம்; விஷ்ணுவை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
கார்த்திகை 2வது சோமவாரம்; வெண் பட்டு சாற்றி சிவனை வழிபட நினைத்தது நடக்கும்!
எழுத்தின் அளவு:
கார்த்திகை 2வது சோமவாரம்; வெண் பட்டு சாற்றி சிவனை வழிபட நினைத்தது நடக்கும்!

பதிவு செய்த நாள்

25 நவ
2024
10:11

சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் தனிச் சிறப்பு மிக்கவை. இன்று எல்லா சிவாலயங்களில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும். சோமன் என்றால் சந்திரன். சந்திரனுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் பெற்றார் சிவ பெருமான். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் என்பது விசேஷம். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும். நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சோமவார விரதம் வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ஆனாலும் கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு மிக்கவை. இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா விமரிசையாக நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு செய்கிற காட்சி சிலிர்க்க வைக்கும். கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன். சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால். ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி கிட்டும். வம்சம் தழைத்தோங்கும். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்ய கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar