Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் வெயில் அடித்ததால் ... சபரிமலையில் ரோப்வே: ஜனவரியில் அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு நடவடிக்கை சபரிமலையில் ரோப்வே: ஜனவரியில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
எருமேலி, புல் மேடு பாதைகள் திறப்பு; அரசு பஸ்ஸில் தினமும் 90 ஆயிரம் பேர் பயணம்
எழுத்தின் அளவு:
எருமேலி, புல் மேடு பாதைகள் திறப்பு; அரசு பஸ்ஸில் தினமும் 90 ஆயிரம் பேர் பயணம்

பதிவு செய்த நாள்

05 டிச
2024
10:12

சபரிமலை; கன மழை காரணமாக மூடப்பட்ட குமுளி - புல்மேடு, எருமேலி - கரிமலை பெருவழிப்பாதை ஆகியவை நேற்று காலை திறக்கப்பட்டது. பக்தர்கள் இவ்வழியாக சபரிமலை வரத் தொடங்கியுள்ளனர்.


கடந்த 30 முதல் நேற்று முன்தினம் காலை வரை பெய்த பெருமழை காரணமாக காட்டுப்பாதைகளான குமுளி - சத்திரம் - புல்மேடு, எருமேலி முக்குளி - கரிமலை பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பின்னர் சபரிமலை பாதைகளில் மழை இல்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8:00 மணி முதல் இந்த பாதைகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். புல் மேடு பாதையில் நேற்று மதியம் ஒரு மணி வரை 581 பக்தர்கள் வந்தனர். இந்த பாதைகளில் வனத்துறை மற்றும் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் நிலக்கல் - பம்பை செயின் சர்வீஸ் மற்றும் தொலைதூர சர்வீஸ்களை நடத்தி வருகிறது. கடந்த18 நாட்களில் பம்பை - நிலக்கல் இடையே 43 ஆயிரத்து 242 சர்வீஸ்களையும், 8 ஆயிரத்து 657 தொலைதூர சர்வீஸ்களையும் இயக்கி உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் தினசரி வருமானம் 46 லட்சம் ரூபாயாக உள்ளது. தினமும்90 ஆயிரம் பக்தர்கள் இந்த போக்குவரத்து கழகத்தின் சேவையை பயன்படுத்துகின்றனர். தொலைதூரப் பயணிகளின் வசதிகளுக்கு வசதிக்காக பம்பை திருவேணியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பக்தர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க சன்னிதானம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 நாட்களில் இங்கு 23 ஆயிரத்து 28 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் 10 டாக்டர்கள் இங்கு பணியில் இருக்கின்றனர்.பாம்பு கடி சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar