ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியலில் ரூ.1.65 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2024 10:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.65 கோடி வருவாய் கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, கோயில் ஊழியர்கள், சிவனடியார்கள் பலர் எண்ணினார்கள். இதில் ரொக்கம் 1 கோடியே 65 லட்சத்து 6788 ரூபாயும், தங்கம் 105 கிராம், வெள்ளி 4 கிலோ 665 கிராம் காணிக்கையாக கிடைத்தது.