நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று 8 ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. மதியம் யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் கோவில் உலாவாக வந்து விநாயகர், வள்ளி தேவ சேனா சுப்பரமணியர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சமேத ராஜராஜேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.