பதிவு செய்த நாள்
07
டிச
2024
07:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, நேற்று மூன்றாம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. 10:00 மணிக்கு மர மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மர சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், மர அன்னபட்சி வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.