Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை சோமவாரம்; ஆபத்சகாய வில்வ ... வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா; பக்தர்கள் தரிசனம் வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபத்தன்று மலை ஏற அனுமதி கிடைக்குமா? திருவண்ணாமலையில் வல்லுனர் குழு ஆய்வு
எழுத்தின் அளவு:
தீபத்தன்று மலை ஏற அனுமதி கிடைக்குமா? திருவண்ணாமலையில் வல்லுனர் குழு ஆய்வு

பதிவு செய்த நாள்

09 டிச
2024
12:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ., சுற்றளவு கொண்டது. இதை சுற்றி, 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கடந்த, டிச., 1ல், பெஞ்சல் புயலால், மலை மீது ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.


இதில், அடிவாரத்தில் ஒரு வீட்டில், 7 பேர் சிக்கி பலியாகினர். வரும், 13ல் தீப திருவிழா என்பதால், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. மலையில் ஏறிச்சென்று தீபத்தை காண, சில ஆண்டுகளாக, 2,500 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை அனுமதிக்க சாத்தியக்கூறு உள்ளதா என, புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர் உள்ளிட்ட எட்டு பேர் குழுவினர், மலை மீது ஏறிச் சென்று நேற்று காலை ஆய்வு செய்தனர்.


கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது: கார்த்திகை தீப திருவிழா வரும், 13ம் தேதி நடக்க உள்ளது. இதில், 2,500 பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு, மலைக்கு சென்று தீபத்தை காண அனுமதிக்கப்படுகிறது. மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மலை மீது பக்தர்களை அனுமதிக்க ஏதுவாக, மண் ஸ்திர தன்மையுடன் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்த ஆய்வறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து அரசு உத்தரவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar