அஷ்டமி பூப்பிரதட்சணம் : டிச., 23ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 03:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 23ல் அஷ்டமி பூப்பிரதட்சணம் யொட்டி அன்று கோயில் நடை சாத்தப்பட உள்ளது. டிச., 23ல் அஷ்டமி பூப்பிரதட்சணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைத்தொடர்ந்து கால பூஜை நடக்கும். பின் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். இதனால் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். மதியம் 12:10 மணிக்கு கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும் நடை திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடக்கும். ஆகையால் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்கவும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.