Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனீஸ்வரன் கோவில் திருவிழா; ... காளஹஸ்தி சிவன் கோயிலில் தமிழக கவர்னர் ரவி தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பேட்டை துள்ளி ஆடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பேட்டை துள்ளி ஆடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 டிச
2024
05:12

ரெகுநாதபுரம; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நேற்று மற்றும் இன்று இரு தினங்கள் கோலாகலமாக நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் விமர்சையாக விழா நடக்கிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் வல்லபை ஐயப்பன் சன்னதி முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் மண்டல பூஜை விழா ஆரம்பமானது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. ரெகுநாதபுரம் முத்துநாச்சி அம்மன் கோயிலில் இருந்து திரண்ட ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ண பொடிகளை பூசி, மேளதாளங்கள் முழங்க நடனமாடியவாறு பேட்டை துள்ளியபடி வந்தனர். நாட்டிய குதிரைகள் மற்றும் அலங்கார நடனங்கள் நடந்தது. வல்லபை ஐயப்பன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் ஐயப்பன் வீதியுலா சென்றார். கோயில் அருகே உள்ள பஸ்மக்குளத்தில் தாம்பூல தட்டில் உற்ஸவர் ஐயப்பன் மீது மஞ்சள், பால், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட பத்து வகையான அபிஷேக தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கருடன் வட்டமிட்டவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பஸ்மக்குலத்தில் புனித நீராடினர். மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. பக்தர்களுடன் கோயிலை வந்தடைந்த உடன் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு தொடர்ந்து நெய்யபிஷேகம் நடந்தது. சுவாமியே சரணம் ஐயப்பா சரணகோஷம் முழங்கினர்.


ஐயப்பன் பக்தி பாடல் பஜனை மற்றும் உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. கொடி மரத்திலிருந்து கொடிபட்டம் இறக்கப்பட்டது. பூஜைகளை வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். பக்தர்களுக்கு மூன்று வேளையும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். வருகிற டிச., 31 அன்று சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கான பெருவழி பயண யாத்திரை கோயிலில் இருந்து துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar