பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
மிருகசீரிடம்; அதிர்ஷ்ட காலம்
செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய தொழில் அமையும். வேலைக்காக முயற்சித்தோரின் கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்:
மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜீவனாதிபதியாக, தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுவை ஏற்படுத்துவார். அதற்கேற்ற உயர்வையும் வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வருவாயை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். நோய்களை அகற்றுவார். நினைத்ததை நடத்தி வைப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதங்களில பிறந்தவர்களுக்கு மே 25 வரை லாப ராகுவால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே26 முதல் மூன்றாமிட கேதுவால் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைப்பதை சாதிக்க முடியும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே. 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 10 வரை ஜென்ம குருவாக, அலைச்சல் ஏற்படுத்தினாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். மே.11 முதல் தன குருவாக, வருமானத்தை அதிகரிப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். தொழிலில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். வழக்கில் வெற்றியை வழங்குவார். வேலைவாய்ப்பை உண்டாக்குவார்.
3,4 ம் பாதத்தினருக்கு மே 10 வரை விரய குருவாக, செலவை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற வருமானத்தை வழங்குவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவார். நோய்நொடிகளில் இருந்து விடுவிப்பார். மே 11 முதல் ஜென்ம குருவாக, பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். நீண்ட கால கனவை நனவாக்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். திருமணம், குழந்தை பாக்கியம், பட்டம். பதவி என முன்னேற்றுவார்.
சூரிய சஞ்சாரம்: மிருசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 - ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக். 18 - நவ. 16 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 15 - மே 14 காலத்திலும், ஆக. 17 - செப். 16, நவ.17 - டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தில் இருந்த தடைகளை நீக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வம், செல்வாக்கை உயர்த்துவார். அரசியலில், அதிகாரத்தில், பணியில் உள்ளவர்களுக்கு யோகத்தை வழங்குவார். நோய், எதிர்ப்பு, வம்பு, வழக்குகளில் இருந்து விடுவிப்பார். புதிய தொழில், வேலை வாய்ப்பு கனவுகளை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உழைப்பிற்கேற்ற வருமானமும் முயற்சிக்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ். மருத்துவம், மருத்துவர்கள். கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். ஆசிரியர்கள், காவல் துறையினர், கலைஞர்கள் முன்னேற்றமடைவர்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு பணியில் உயர்வு கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும்.
பெண்கள்: திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பணிபுரியும் இடத்தில் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
கல்வி: உயர் கல்விக்குரிய யோகம் இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. தேர்வு வரையில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை நீங்கும். நரம்புக் கோளாறு, பரம்பரை நோய், நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்டவர்கள், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள் குணமடைவர்.
குடும்பம்: நெருக்கடி நிலை மாறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். உறவினர்களுடன் இணக்கம் உண்டாகும்.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட்டு வர வாழ்வு சுபிட்சமாகும்.
திருவாதிரை; நல்லநேரம் வந்தாச்சு
புதன், ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2025ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். தொழில் முன்னேற்றமடையும். வியாபாரம் விருத்தியாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினை விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும்.
சனி சஞ்சாரம்: சனிபகவான் ஆண்டு முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்க இருப்பதுடன், அவருடைய 3,7,10 ம் பார்வைகள் ராசிக்கு 3,6,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். இதுவரை இருந்த பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும். செல்வாக்கு உயரும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 26 வரை 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ராகுவும், 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய வேலை அமையும். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் உண்டாகும். மே 27 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது முயற்சி ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் நிலை உயரும். முன்னேற்றத்திலும் முயற்சியிலும் ஏற்பட்ட தடை விலகும். நினைப்பது நடந்தேறும். சொத்து சேரும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாகி விரய குருவாக சஞ்சரிப்பார். தொடர்ந்து மே 11 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாகவும், அக். 8 முதல் கடகத்தில் தன குருவாகவும் சஞ்சரிப்பார். மே.10 வரை விரய குருவாக செலவுகளை அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மே11 முதல் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர், விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு தருவார். தொழிலை விரிவு செய்ய வைப்பார். திருமணம், குழந்தை பாக்கியம், பட்டம். பதவி என வாழ்வை முன்னேற்றுவார். புதிய வீட்டில் குடியேற்றுவார். அக். 8 முதல் தன குருவாக சஞ்சரிப்பவர் ஆதாயம் அளிப்பார்.
சூரிய சஞ்சாரம்:
மார்ச் 15 - மே 14 காலத்திலும், ஆக. 17 - செப். 16, நவ.17 - டிச. 15 காலங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11ல் சஞ்சரிக்கும் சூரியன், முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட பணி நடக்கும். அரசு வழியில் ஆதாயம் சேரும். செல்வம், செல்வாக்கு உயரும். அரசியலில், அதிகாரத்தில், பணியில் உள்ளவர்களுக்கு யோகத்தை வழங்குவார். நோய், எதிர்ப்பு, வம்பு, வழக்குகளில் இருந்து விடுவிப்பார். புதிய தொழில், வேலைவாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.
பொதுப்பலன்: சனி, குரு, ராகு, கேது, 120 நாட்கள் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் 2025 உங்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். நீண்ட கால கனவு நனவாகும். நெருக்கடி, பிரச்னை, போராட்டம் மறையும். நினைத்தது நடந்தேறும். செல்வாக்கு உயரும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவர். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். தொழிலுக்காக அரசின் அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் ஏற்படும். நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், வாகனம், இயந்திரம், டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி. சினிமா, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கை கொடுக்கும்.
பணியாளர்கள்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு, சலுகைகள் கிடைக்கும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர். எதிர்பார்த்த மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும்.
பெண்கள்: கனவு நனவாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வருடத்தின் பிற்பகுதியில் திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பொன் பொருள் சேரும். விரும்பிய பொருளை வாங்குவீர்.
கல்வி: படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மை தரும். சிரமம் பார்க்காமல் தேர்வு வரை படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதால் கல்லுாரி கனவு நனவாகும்.
உடல்நிலை: நீண்ட நாளாக இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிகிச்சை மேற்கொண்டும் குணமாகாத நோய்கள் இக்காலத்தில் குணமாகும்.
குடும்பம்: உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது. இதுவரை வெறும் கனவாகவே இருந்த ஆசைகள், முயற்சிகள் இந்த வருடத்தில் நனவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுப காரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்.
பரிகாரம்: திருவெண்காடு புதன் பகவானை தரிசித்து வர முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம்; வெற்றி நிச்சயம்
குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். சங்கடம் விலகும். விருப்பம் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.
சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் பாக்யாதிபதியாக, நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். பட்டம், பதவி, செல்வாக்கு என முன்னேற்றப்பாதைக்கு வழிகாட்டுவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். பணப்புழக்கம் அதிகரிப்பார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டமாதிபதியாக, நெருக்கடிக்கு ஆளாக்குவார். உழைப்பிற்கேற்ற பலன்களை வழங்குவார். ஏதேனும் ஒரு வகையில் மன சங்கடத்தை ஏற்படுத்துவார்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 க்குப் பிறகும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே. 25 வரையிலும் கேது முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உழைப்பிற்கேற்ற லாபத்தை அளிப்பார். எதிர்பார்ப்புகளில் ஆதாயத்தையும், ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். தன்னம்பிக்கை, தைரியம் கூடும்.
குரு சஞ்சாரம்:
பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே10 வரை விரய குருவாக செலவுகளை அதிகரித்தாலும் விருப்பங்களை நிறைவேற்றுவார். எதிர்ப்பில் இருந்து பாதுகாப்பார். வழக்கில் வெற்றியளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.
மே 11 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்தாலும், திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு மே 10 வரை லாப குருவாக வசதி வாய்ப்பை அதிகரிப்பார். சங்கடம் மறையும். திருமண யோகம், குழந்தை பாக்கியம், சமூக அந்தஸ்தை உண்டாக்குவார். மே 11 முதல் விரய குருவாக செலவை அதிகரித்தாலும், உடல்நிலையில் முன்னேற்றம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, சொத்து சேர்க்கை, வழக்கில் வெற்றி என உங்கள் நிலையை உயர்த்துவார்.
சூரிய சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 - மே 14, காலத்திலும், ஆக. 17 - செப். 16, நவ. 17 - டிச 15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜன.1 - 13, ஏப்.14 - ஜூன் 14 காலத்திலும், செப். 17 - அக். 17, டிச. 16 - 31 காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், உங்கள் நிலையில் வெளிச்சத்தை உண்டாக்குவார். மனக்குறைகளை நீக்குவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாய்ப்பு தேடிவரும். அரசு வழியில் ஆதாயம், முயற்சிகள் வழியே எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், வர்த்தகம், ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு கூடுதல் லாபம் உண்டாகும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். உழைப்பாளர்களின் நிலை உயரும். மதிப்பும், ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும்.
கல்வி: படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
உடல்நிலை: உடல்நிலையில் இருந்த பாதிப்பு படிப்படியாக விலகும். நீண்டகால நோய்களும் இப்போது சரியாகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அளவிற்கு உங்கள் உடல்நிலை முன்னேற்றம் அடையும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடம், போராட்ட நிலை நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பு கனவை நனவாக்குவீர்.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் தீரும். நன்மை அதிகரிக்கும்.