Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ... அன்னுார் மன்னீஸ்வரர் தேர் திருவிழாவில் அசத்திய திருக்குறள் கும்மி ஆட்டம் அன்னுார் மன்னீஸ்வரர் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்; வரும் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பஞ்சவடியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்; வரும் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

07 ஜன
2025
05:01

சென்னை; ‘மத்திய திருப்பதி’ என்று அழைக்கப்படும் பஞ்சவடி கோவில், திண்டிவனம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் ஸ்ரீனிவாச பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், தனிச் சிறப்பை பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்கவாசல் திறப்பு, 10ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாளை காலை 9:00 மணிக்கு மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாராதனம், சாற்றுமுறை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியான, 10ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை நடக்கிறது. காலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் பரமபதவாசல் கடந்து, ஆழ்வார்களின் மங்களாசாசனம் கண்டு, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி இரவு 7:00 மணிவரை அருள்பாலிக்கிறார். பக்தர்கள் அதிகாலை 5:00 மணி முதல் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் அறங்காவலர் கோதண்டராமன், உப தலைவர் யுவராஜன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar