Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சி குமரகோட்ட முருகப்பெருமான் ... மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம் காளைகளுக்கு படையல் போட்டு வழிபாடு மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடந்தை மடத்தில் பிறந்த கன்றுக்குட்டிக்கு துர்கா என பெயர் சூட்டி தொட்டிலில் வைத்து தாலாட்டு
எழுத்தின் அளவு:
குடந்தை மடத்தில் பிறந்த கன்றுக்குட்டிக்கு துர்கா என பெயர் சூட்டி தொட்டிலில் வைத்து தாலாட்டு

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
05:01

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காவிரிக்கரையோரம் சோலையப்பன் தெரு விஜயீந்த்ர தீர்த்தர் சுவாமிகள் மூல பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இவர் கி.பி. 1614ம் ஆண்டில், 17ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். ஆயகலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்து, 108 கிரந்தங்கள் எழுதியவர். இந்த விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடம், ஸ்ரீமந்திராலயம் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல் பட்டுவருகிறது.


இந்நிலையில் இன்று மாட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீமந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசுபுதேந்திர தீர்த்தரின் ஆணையின்படி, விஜயீந்த்ர தீர்த்தர் சுவாமிகள் மூல பிருந்தாவனத்தில் உள்ள காமதேனு கோசாலையில் 10 நாட்டு பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. இந்த கோசாலையில் உள்ள "உம்பளச்சேரி நாட்டு மாடு" புதிதாக ஈன்ற பசுக்கன்றுக்கு "துர்கா" என பெயரிட்டு, தொட்டிலில் வைத்து தாலாட்டும் வைபவமும், மும்மாரி மழை பெய்து நாடு செழிக்கவேண்டும், உலக நாடுகள் அமைதியாக, ஒன்றுமையுடன் வளரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடினர். ஏற்பாடுகளை மடத்து மேலாளர் நரசிம்மன், மாதவன் மற்றும் விஷ்ணுபாலாஜி, மடத்தின் பணியாளர்கள் செய்திருந்தனர். இது குறித்து மடத்தின் மேலாளர் விஷ்ணுபாலாஜி கூறியதாவது: கோசாலையில் 10 நாட்டு பசுக்கள் உள்ளது. இதில், உம்பளச்சேரி பசுவும் ஒன்று. இந்த பசுவானது இதுவரை காளை கன்றுக்குட்டிகளை ஈன்று வந்தது. முதல்முறையாக பெண் கன்று ஈன்றுள்ளதால், துர்கா என பெயர்சூட்டியுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar