Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்? இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் ...
முதல் பக்கம் » துளிகள்
காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு 1,000 லிட்டர் மது காணிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 டிச
2012
01:12

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பிரசித்தி பெற்றது. அங்கு காவல் தெய்வமாய், நதி கரையோரம் வீற்றிருக்கும் சோனைமுத்து கருப்பணசாமியும், கோயில் வழிபாட்டில் இடம்பெறுகிறார். கருப்பணசாமி என்றாலே, துடிப்பானவன் என்பது அனைவரும் அறிந்ததே! அதனால் தானோ, என்னவோ, அவரை நெருங்குவோரிடம், பயபக்தி இருக்கும்.  கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதிலும், கருப்பு கெட்டிக்காரர்  என்பதால், அவரை குளிர்விப்பதில்,  நம்மவர்கள், அதை விட  கெட்டிக்காரர்கள்.  சின்னமனூர் கருப்பணசாமிக்கு,  ஆண்டிற்கு ஒரு முறை ஆடியில் நடக்கும் பொங்கல் விழாவில், டாஸ்மாக்  சரக்குகளை காணிக்கையாய் குவித்து விடுகின்றனர். முன்பு, காய்ச்சும்  கலாசாரம் இருந்த போது, பேரல்களில் ஊற்றி, படைத்து வந்துள்ளனர்.  நாளடைவில், காய்ச்ச தடை வந்ததால், டாஸ்மாக் சரக்குகள், சத்தமில்லாமல் அணிவகுத்தன. காணிக்கை படைக்கும் நேரத்தில் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம், குவாட்டர், ஆப், புல், என, ஒரே  கிடிங்... கிடிங்... சத்தம் தான்.  குறைந்தது, 1,000 லிட்டர் மது,  காணிக்கையாக வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக நடப்பதை போல் இல்லாமல், படைக்கப்படும் அனைத்தும், சாமிக்கே தரப்படுகிறது. கருப்பணசாமியின் வலது புறத்தில் உள்ள குழி ஒன்றில், ஆயிரம் லிட்டர்  மதுவும், ஊற்றப்படுமாம். வழக்கமாய் அந்த குழியில் ஒரு லிட்டர் கூட  ஊற்றமுடியாது. விழா அன்று மட்டும், ஆயிரம் லிட்டர் மதுவை ஊற்றலாம். துளி கூட, மது வாசம் இருக்காது,  என்கிறார், கோயில் பூசாரி ரகுராமன். 

கருப்பா... உன்னை சந்திக்க வாறோம், ஆடி வரை பொறுப்பா... என, நீங்கள் சொல்வது, எங்களுக்கு கேட்கும் போது, கருப்பனுக்கு கேட்காதா...!

 
மேலும் துளிகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 
temple news
கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar