Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி நெரிசல் விபத்து விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு
எழுத்தின் அளவு:
திருப்பதி நெரிசல் விபத்து விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
12:01

புதுடில்லி; திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்பால் அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.


ஆந்திராவின் திருப்பதி – திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டிக்கெட், திருப்பதியில் பல்வேறு மையங்களில் வினியோகிக்க கடந்த 9ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை வாங்க, 8ம் தேதி காலை முதலே, சிறப்பு கவுன்டர்கள் முன் ஏராளமானோர் குவியத் துவங்கினர். இதில், சீனிவாசம் கவுன்டரில் கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், திருமலையில் உள்ள லட்டு கவுன்டரில், மின்கசிவு காரணமாக கடந்த 13ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜின்டால் நியமிக்கப்பட்டார். இவர், நேற்றும், இன்றும் திருமலை மற்றும் திருப்பதியில் விபத்து நடந்த பகுதியில் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில், மத்திய அரசின் தலையீடு முன்னெப்போதும் இல்லாத அளவு உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நேரடி ஆய்வு விசாரணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சீவ் குமார் ஜின்டாலின் வருகை ரத்து செய்வது குறித்த தகவலை, தேவஸ்தான அதிகாரிகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar