Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... சத்ய சாய்பாபா பஜனை நிகழ்ச்சி; பக்தர்கள் வழிபாடு சத்ய சாய்பாபா பஜனை நிகழ்ச்சி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.54 லட்சத்தில் கோசாலை
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.54 லட்சத்தில் கோசாலை

பதிவு செய்த நாள்

22 ஜன
2025
10:01

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் நந்தவனத்தில், 20 மாடுகள் கட்டி வைத்து வளர்க்க, 54 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இந்த கோவிலுக்கு தோலம்பாளையம் சாலையின் ஒரு பக்கம், புனித தீர்த்த தெப்பக்குளமும், அதன் எதிர்புறம் பூச்செடிகளை வளர்க்கும் நந்தவனமும் உள்ளது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், பசு கன்று குட்டிகளை காணிக்கையாக கோவிலுக்கு வழங்கி வருகின்றனர். கோவில் நிர்வாகத்தினர் நந்தவனத்தில், திறந்த வெளியில் கன்றுகளையும், பசு மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்த பசுக்களை முறையாக வளர்க்க, கோசாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து கோவில் நிர்வாகம், 54 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை அமைத்து வருகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூறியதாவது: தற்போது காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏழு மாடுகள் உள்ளன. இந்த மாடுகளுக்கு தேவையான தீவனம் வாங்கி இருப்பு வைத்து, கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த மாடுகளை சரியான முறையில் பராமரிக்க கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில், 20 மாடுகள் கட்டி பராமரிக்கும் அளவிற்கு, கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, 10 மாடுகள் மட்டுமே கட்டப்பட உள்ளன. இதில் தீவனத் தொட்டிகள், கால்நடைகளுக்கு டாக்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறை, தீவன இருப்பு அறை ஆகியவை கட்டப்படுகின்றன. விரைவில் இப்பணிகள் செய்து முடிக்கப்படும். மேலும் நந்தவன இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க, 24.50 லட்சம் ரூபாய் செலவில், காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு நிர்வாகத்தினர் கூறினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், நந்தவனம், 2 ஏக்கருக்கு மேல் காலியாக உள்ளது. இதில் பாதி அளவுக்கு மட்டும், பூஜைக்கு தேவையான பூச்செடிகளை வைக்க வேண்டும். மீதமுள்ள காலி இடத்தில் மாடுகளுக்கு தேவையான, பசும் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். மின்மோட்டார், கிணற்று தண்ணீர் வசதி உள்ளதால், தீவனப் பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியும். எனவே கோவில் நிர்வாகம் கால்நடைகளுக்கு தேவையான பசு தீவனங்களை பயிர்களை வளர்க்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar