பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
புதுச்சேரி: புதுச்சேரி மோரேசன் வீதி கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. கடந்த 13ம் தேதி விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து துவஜாரோகனம் சஷ்டி ஆரம்பம், யானைமுகன், சிங்கமுகன் சம்ஹாரம், திருத்தேர், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், தெருவடைச்சான் உற்சவங்கள் நடந்தன. நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற கருந்தலாக்குறிச்சி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். விழுப்புரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்
நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் காட்சி பொருள் அமைத்திருந்த கருந்தலாக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள் மோகன்ராஜ், தேவேந்திரன் ஆகியோர் பரிசு பெற்றனர். கண்காட்சியில் சாதனை படைத்த மாணவர்கள் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டப்பட்டனர். ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், ஆசிரியர் கழக தலைவர் அழகுவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னசாமி, பா.ஜ., பெரியசாமி, அ.தி. மு.க நிர்வாகி செந்தில், குழந்தைவேல், ஆசிரியர் மணிவண்ணன் பங்கேற்றனர்.