பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் இன்று மஹா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், மஹா குருபூஜை நடக்கிறது. பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் இன்று மஹா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் சித்தர் பெருமானின், 23ம் ஆண்டு மஹா குருபூஜை விழா நடக்கிறது. மஹா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மஹா குருபூஜை விழா நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டு, 23ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை கண் பார்வையற்ற, 200 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம், பேனா, போர்வை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை கோபூஜையும், காலை, 10.30 மணி முதல், 12 மணிவரை குருபூஜை விழாவும், 210 சித்தர்கள் யாக பூஜையும் நடக்கிறது. பின்னர் சாதுக்களுக்கு வஸ்திரதானமும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்படுகிறது. அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை மஹா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள், இயக்குனர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்கின்றனர்.