முருகனுக்கு உகந்த தை செவ்வாய்; பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2025 11:02
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தை மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது சிறப்பு என்பதால் கோவிலில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.