பதிவு செய்த நாள்
04
பிப்
2025
02:02
பாலக்காடு; எடத்தறை பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு எடத்தறை விஸ்வகர்மா நகரில் அமைந்துள்ளது பூண்டிச்சேரி வெழுத்தன் பகவதி அம்மன் கோவில். இங்கு நூறணி ஈஸ்வர ஐயர் தலைமையை மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தன. காலை மங்கல இசை வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை, மகா சுதர்சன ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து சாந்தி, பிம்ப க்ஷீராதிவாசம், நவகிரக ஹோமம், நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம், பிம்ப தன்வந்திரி ஹோமம், விளக்கு பூஜை, நவகம், பஞ்சகவ்யம், கலச பூஜை, கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து திருத்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, கோபுரம் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, விசேஷ பூஜைகள் ஆகியவை நடந்தன.