ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகமலவல்லி சமேத ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், காலை, 7:00 – இரவு, 7:00 வரை, சூர்யபிரபை, சேஷ, யாளி, குதிரை, கருட, அனுமந்த, சந்திரபிரபை ஆகிய, 7 வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.