Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி மஞ்சத்தில் அருள்பாலித்த ... தைப்பூச படையல்; சாதத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு தைப்பூச படையல்; சாதத்தில் வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத் திருவிழா; ரிஷப வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
தைப்பூசத் திருவிழா; ரிஷப வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா

பதிவு செய்த நாள்

07 பிப்
2025
02:02

திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மர ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தைப்பூச விழாவையொட்டி கோயில் கடந்த 02ம் தேதி உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றினர். இதனைத் தொடர்ந்து சமயபுர மாரியம்மன் உற்சவர் அம்பாள் 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா வருகிறார். விழாவில் ஐந்தாம் திருநாளில் உற்சவ அம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாதாரனை நடைப்பெற்றது. தொடர்ந்து அம்மன்  மர ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 10 ம் நாளான பிப்ரவரி  11ம் தேதி காலை 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக அம்மன் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி, மண்ணச்சநல்லூர், நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைந்து பின்பு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar