பதிவு செய்த நாள்
07
பிப்
2025
05:02
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி, பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. பொழிவிழந்து காணப்பட்ட கோவிலை, கடந்த 2016 இல் பிரபல வாஸ்து சிற்பி பிரம்மஸ்ரீ காணிப்பையூர் குட்டன் நம்பூதிரி என்பவர் மூலம், வடிவமைக்கப்பட்ட கோவிலின் புனர்நிர்மாண பணி நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 3-ம் தேதி அபிஷேக பூஜை, நடைதிறப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், கலாச்சார செம்மேளனம், ஆன்மீக சொற்பொழிவு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இன்று காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, அபிஷேகம், மலர் நிவேத்தியம், கணபதி ஹோமம், கனி காணல், கலச பூஜை நடந்தது. ஒரு 12 மணி முதல் ஒரு மணி வரை, தேவ பிரதிஷ்டை செய்யப்பட்டு, கலச குடம் பிரதிஷ்டை, நித்திய நிதானம், நடைதிறப்புடன் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை தந்திரி பிரம்மஸ்ரீ சசிதரன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் செய்தனர். கோவில் பூஜைகளை சுவாமி கார்த்திக் தலைமையிலான குழுவினர் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கோலாட்டம், திருவாதிரை நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சியில் சுவாமி ஹம்சானந்தபுரி ஆன்மீக அருளாசி வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்கவேலு, தலைவர் பாஸ்கரன், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் கேசவன், திருவிழா கமிட்டி கன்வீனர் சசிதரன் தலைமையிலான கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.