நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, யாகசாலை பூஜை நடத்தி, மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.