பதிவு செய்த நாள்
12
பிப்
2025
10:02
பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனையடுத்து இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது என உ.பி., மாநில அரசு தெரிவித்து உள்ளது. 26 ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், 55 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இன்று மாகி பூர்ணிமா எனும் மகா பூர்ணிமாவை முன்னிட்டு புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு மகா பூர்ணிமா மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. எனவே, பிரயாகராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது. இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது என உ.பி., மாநில அரசு தெரிவித்து உள்ளது. 26 ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், 55 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.