மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர், ஆவுடைய நாயகிஅம்மன் கோயிலில் கவிராஜ பண்டிதருக்கு தனி சன்னதி உள்ள நிலையில் அவரது குருபூஜையை முன்னிட்டு அதிகாலை பால், பன்னீர்,சந்தனம்,இளநீர்,தயிர்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கூடியிருந்து பஜனை பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.