பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.31 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2025 08:02
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.31 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாத உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776, வெளிநாட்டு கரன்சி 1153, எண்ணங்கள், தங்கம் 557 கிராம் வெள்ளி 21.235 கிலோ கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.