Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவிலில் ... குன்றத்தூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் குன்றத்தூர் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில்  மாசி கொடை விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

03 மார்
2025
10:03

நாகர்கோவில்; பெண்களின் சபரிமலை எனப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


கேரள மாநிலத்திலிருந்து பெண்கள் தலையில் இருமுடி ஏந்தி கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனப்படுகிறது. இங்கு மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4:30 -மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. பிறகு காலை 7:57 மணிக்கு தந்திரி சங்கரநாராயணன் ஐயர் கொடிமரத்தில் கொடியேற்றினார். மேற்குவங்க கவர்னர் டாக்டர் டி.வி.ஆனந்த் போஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ., எம்.ஆர். காந்தி தேவசம் போர்டு அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் நடத்தும் 88 - வது சமய மாநாட்டை கவர்னர் டாக்டர் டி.வி.ஆனந்த் போஸ் துவக்கி வைத்தார். முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றினார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி, திருநெல்வேலி ஆதீனமடம் மவுன மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆசி வழங்கினர். இவ்விழா மார்ச் 11 வரை நடக்கிறது. மார்ச் 7ல் வலிய படுக்கை என்ற மகா பூஜை நடக்கிறது. 10 ல் சக்கர தீ வெட்டி ஊர்வலம், 11ல் நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ... மேலும்
 
temple news
சென்னை; 500 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா முதல் நாள் மாலை வெள்ளி ஹம்ச வாகனத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar