Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் ... பனி லிங்க தரிசனம்; ஜூலை 3ல் அமர்நாத் யாத்திரை துவக்கம் பனி லிங்க தரிசனம்; ஜூலை 3ல் அமர்நாத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.4,000 கோடியில் கேதார்நாத்தில் ரோப் கார்; 9 மணி நேரம் வரையாகும் பயணம் 36 நிமிடங்களாக குறையும்!
எழுத்தின் அளவு:
ரூ.4,000 கோடியில் கேதார்நாத்தில் ரோப் கார்; 9 மணி நேரம் வரையாகும் பயணம் 36 நிமிடங்களாக குறையும்!

பதிவு செய்த நாள்

06 மார்
2025
12:03

கேதார்நாத், ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாரா புனித தலங்களில், 6,800 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் வசதி அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கேதார்நாத்தில், ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.


தனியார் பங்களிப்பு; ஏப்., - மே -மாதத்தில் அட்சய திரிதியை தினம் துவங்கி, அக்., - நவம்பரில் தீபாவளி வரை கோவில் திறந்திருக்கும். 11,968 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலை மீது இருக்கும் கேதார்நாத் கோவிலுக்கு, கவுரிகுண்டில் இருந்து 16 கி.மீ., துாரம் மலை மீது நடந்தும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்ய வேண்டும். இந்நிலையில், கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதையடுத்து, 4,081.28 கோடி ரூபாய் செலவில், சோன் பிரயாக் - -கேதார்நாத் இடையே 12.9 கி.மீ., துாரத்துக்கு தனியார் பங்களிப்புடன் ரோப் கார் அமைக்கப்படுகிறது. 


அதிவேக காற்று மற்றும் கடுங்குளிரை தாங்கும் வகையில் அமைக்கப்படும் ரோப் காரில், ஒரு மணி நேரத்துக்கு 1,800 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 18,000 பேர் பயணிக்கலாம். தற்போது ஒன்பது மணி நேரம் வரையாகும் பயண நேரம், வெறும் 36 நிமிடங்களாக குறையும். இதே போல், உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்கும் 2,730 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் திட்டத்தை அமைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


1,100 பேர்; சீக்கிய குரு கோவிந்த் சிங் நினைவாக அமைந்துள்ள இந்த குருத்வாரா, 15,000 அடி உயரத்தில், ஏழு மலை முகடுகளுக்கு மத்தியில் பனி பிரதேசத்தில் உள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை திறந்திருக்கும். கோவிந்த் காட்டில் இருந்து 21 கி.மீ., துாரத்துக்கு கடுமையான மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.  இதை தவிர்க்கும் வகையில், 12.4 கி.மீ., துாரத்துக்கு, மணிக்கு 1,100 பேர் பயணிக்கும் வகையில் ரோப் கார் அமைக்கப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகண்டில் உள்ள முக்வா தேவி கோவிலில் கங்கா ஆரத்தி செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar