பதிவு செய்த நாள்
06
மார்
2025
03:03
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டி பெருமாள், - முந்தம்மாள், தொட்டிச்சி அம்மன், நாகம்மாள், கருடாழ்வார் ஆகிய கோவில்களின் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மார்ச் 4. கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், தீர்த்தம் அழைத்தல், கணபதி ஹோமம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, வேதபாராயணம், நாடிசந்தான புர்ணாகுதி உள்ளிட்ட யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் கோவிலில் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச் சாரியார் தலைமையிலான குருக்கள் நடத்தி வைத்தனர். இதில் அஞ்சுகுளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.