ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் மகாதேவ அஷ்டமி பூஜையில் அதிகாலை ருத்ரஜெபம், அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. நோய்தீரவும், குழந்தை பேறு வேண்டியும், சாப்பிட்ட இலையின் மேல், பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர்.