ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்; தயிர் சாதம் படைத்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2025 10:03
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் நடந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று அன்னக்கொடை உத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 11:00 மணிக்குமேல் வெள்ளிக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னார் முன், தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள் செய்திருந்தனர்.