சின்ன காஞ்சிபுரம் அத்தி வராஹி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2025 10:03
காஞ்சிபுரம்; சின்ன காஞ்சிபுரம், வேலாத்தம்மன் கோவில் தெருவில், புதிதாக அத்தி வராஹி கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது. நேற்று, காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு, அருள்சித்தர் அகஸ்திய அன்புச்செல்வன் முன்னிலையில், வேத விற்பன்னர்கள், கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்நது வராஹி மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.