பதிவு செய்த நாள்
17
மார்
2025
10:03
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கொடிமரத்தின் முன்பு உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஒப்பிலியப்பனுக்கு (திருவிண்ணகரப்பன்) சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பங்குனிப் பெருவிழாவையொட்டி இன்று முதல் வரும் 28ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும் 25ம் தேதி முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், அதனைத் தொடர்ந்து அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி, உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.