தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். வீட்டில் வாராகியம்மனுக்கு விளக்கேற்றி செம்பருத்தி. செவ்வரளி, பானகம். உளுந்து வடை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. மாதுளை, சிவப்பு அவல், ஏதேனும் இனிப்பு. பாயசம் அல்லது வெல்லம் போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். வாராகியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். எதிரி தொல்லை நீங்கும். தடைகள் விலகும். இன்று வாராகியை வழிபட கேட்ட வரம் உடனே கிடைக்கும்!