Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் மகா பெரியவா அனுஷ பூஜை; ... கோவை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த ஐகோர்ட் உத்தரவு கோவை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு
எழுத்தின் அளவு:
ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு

பதிவு செய்த நாள்

21 மார்
2025
12:03

ராய்ச்சூர்; ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மஹாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். காணிக்கையும் அதிகம் வசூலாகிறது.


அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போன்று பூஜையை முடித்த பின், நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர். 80 கிராம் எடையுள்ள வெங்கடேஸ்வர சுவாமியின் கிரீடம், 30 கிராம் எடையுள்ள லட்சுமி கிரீடம், 140 ரூபாய் மதிப்புள்ள பாதங்கள் உட்பட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி கொண்டு தப்பியது. நேற்று காலை பூஜை செய்ய, அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சிரவாரா போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்கின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலில், அதிக அளவில் தங்க நகைகள் இருப்பது தெரிந்தும், பாதுகாப்பு ஊழியர் நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கண்காணிப்பு கேமராவும் பொருத்தவில்லை. இதை நோட்டம் விட்டு, மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருடர்களை கண்டுபிடித்து, நகைகளை மீட்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். திருட்டில் உள்ளூர்வாசிகளில் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar