சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சின்னசேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பங்குனி மாத முதல் வெள்ளியையொட்டி, கோ மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை 7:00 மணிக்கு, கோ மாதாவிற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் பல வண்ண மலர்களால் மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர மற்றும் அஷ்டலஷ்மி பூஜைகளுக்கு பின் மகாதீபாரதனை நடந்தது. வழிபாடுகளை சர்மா பரத்குழுவினர் செய்தனர்.